Friday 27 September 2024

வசந்தகாலம் - பன்னிரெண்டாம் பாகம்

அன்று கோவிலில் எட்டாத கூந்தல் இப்போது அவன் கைகளில் தவழ்ந்து கொண்டிருந்தது. அவள் ஜடையில் உள்ள பின்னலை ஒவ்வொன்றாக தடவினான். தனக்கு பின்னால் நின்று வசந்த் தன்னுடைய ஜடையை எடுத்து அணுஅணுவாக தொட்டுப்பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறான் என்பதை அமுதா கவனித்துக்கொண்டிருந்தாள்.

வசந்த் அவளுடைய தலையை மொட்டை அடிப்பதில் காட்டிய ஆர்வத்தை நினைத்து அவன் சற்று வன்முறையோடு அவள் தலைமுடியை அனுபாவிப்பான் என எதிர்பார்த்தாள்

ஆனால் அவன் அவளுடைய தலைமுடியை பொறுமையாக கையாளுகின்ற விதம் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. வசந்த் தன் விரல்களை அவள் ஜடையில் கீழ் இருந்து மெல்ல ஒவ்வொரு பின்னலாக மேல்நோக்கி கொண்டுவந்தான். அவள் ஜடையின் அடர்த்தி மேலே வரவர அதிகமாகிக்கொண்டே வந்தது. மேல்நோக்கி வந்து அவளுடைய அடர்த்தியான ஜடையின் முதல் பின்னல் வந்ததும் மொத்தமாக அவள் ஜடையை அழுத்தி பிடித்தான். வசந்த் தன்னுடைய ஜடையை முழுவதுமாக அழுத்திப்பிடித்துக்கொண்டிருப்பது அமுதாவை ஏதோ செய்தது


அவன் அவளுடைய கூந்தலை ஸ்பரிசிப்பது அவளுக்குள்ளும் சில உணர்வுகளை தூண்டியது. வசந்த் அவளுடைய ஜடையை மொத்தமாக கையில் எடுத்து பந்துபோல சுருட்டி நுகர்ந்து பார்த்தான். அவளுடைய கூந்தல் வாசனை அவனை எங்கோ அழைத்து சென்றது. வசந்த் தன்னுடைய தலைமுடியை நுகர்ந்து பார்த்து அனுபவிப்பான் என்று அமுதா எதிர்பார்க்கவில்லைஅவள் மேற்கொண்டு எதுவும் சொல்வதற்குமுன் அவளை அப்படியே அருகில் இருந்த சேரில் உட்கார வைத்தான். அமுதா அவனுடைய கைப்பாவையாக மாறிக்கொண்டிருந்தாள். அவள் அமர்ந்ததும் அவள் உச்சந்தலையில் இருந்து அவளுடைய தலைமுடியை நுகர்ந்து பார்க்க ஆரம்பித்தான். ஏற்கனவே அவனுடைய ஒரு கையில் அவளுடைய நீளமான ஜடை மடிந்து இருந்தது. இன்னொரு கையால் அவள் தலைமுடியின் வேர்களை கோதிவிட்டுக்கொண்டே அவளுடைய கூந்தல் வாசனையை அனுபவித்துக்கொண்டிருந்தான்.




அமுதாவின் கணவன்கூட அவளுடைய அழகான தலைமுடியை இவ்வளவு ரசித்து அனுபவித்தது இல்லை. அவள் மனதிற்குள் ஒரு சின்ன எண்ணம் தோன்றியது. அவன் முதலிலேயே கேட்டபோது அவளுடைய ஜடையை அவிழ்த்துக்கொள்ள வேண்டாம் எனக்கூறியது தவறு என நினைத்தாள். இப்போது அவனிடம் தன்னுடைய ஜடையை அவிழ்த்துவிட சொல்லலாமா என தோன்றியதுஆனால் அவள் தலைமுடியை போல அவளுடைய வார்த்தைகளும் இப்போது அவளுடைய கட்டுப்பாட்டில் இல்லை


வசந்த் தன்னுடைய விரல்களால் அவள் கூந்தலில் கோலமிட்டுக்கொண்டிருந்தான். இப்போது தன்னுடைய இரு கைகளையும் அவள் தலைமுடிக்குள் விட்டு விளையாட ஆரம்பித்தான். அவன் கைகளில் இருந்த அமுதாவின் ஜடை மெல்ல நழுவி அவள் முன் விழுந்தது. சரிந்து விழுந்த அவளுடைய ஜடை மடியில் வந்து விழுந்து தவழ்ந்தது. அவளையும் அறியாமல் அமுதா அவளுடைய ஜடை பின்னலை தடவிக்கொடுக்க ஆரம்பித்தாள். வசந்த் இப்போது அமுதாவின் தலைமுடியை இறுகப்பிடித்துக்கொண்டிருந்தான். சில நிமிடங்கள் கழித்து அமுதா மெல்ல திரும்பினாள். வசந்த் அவளுடைய ஜடை இப்போது அவளின் முன் பக்கம் இருப்பதை கவனித்தான். மெல்ல தன்னுடைய கையை அவள் உச்சந்தலையில் இருந்து அப்படியே கீழே ஜடையை நோக்கி தடவிக்கொண்டே வந்தான்


அமுதா தன்னுடைய ஜடையை கையில் எடுத்து அவன் கண்முன்னால் நீட்டி அவள் ஜடையின் அடிப்பகுதியில் இருந்த ரப்பர் பாண்டை கழற்றினாள். வசந்த் கண்கள் விரிய அவளைப்பார்த்தான். அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான். அமுதா இன்னமும் ஜடையை அவிழ்த்துவிடாமல் அவையே பார்த்துக்கொண்டு ஜடையை கையில் ஏந்தி பிடித்துக்கொண்டிருந்தாள். வசந்த் அவள் எண்ணத்தை புரிந்து கொண்டான். அவளுடைய ஜடையை தன்னுடைய கையில் வாங்கினான். மெல்ல அவளுடைய ஜடை பின்னலை அவிழ்த்துவிட ஆரம்பித்தான். அவளுடைய கனமான தலைமுடி விரிய ஆரம்பித்தது. அவளுடைய அவிழ்த்துவிட்ட தலைமுடியை ஆசைஆசையாக அள்ளினான். அவள் முடியை மொத்தமாக எடுத்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். பூக்களை அள்ளி முத்தம் கொடுப்பதுபோல இருந்தது.



அமுதாவின் அழகான தலைமுடியை கையில் ஏந்தியிருப்பதில் அவனுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. இன்னும் ஒரே வாரத்தில் இவள் தலையில் கத்தியை வைத்து இந்த நீளமான தலைமுடியை மொட்டை அடிக்கப்போவதை நினைத்தால் இன்னும் சந்தோசமாக இருந்தது. மொட்டை அடிக்கும்போது இதேபோல் அவன் முன்னால் தலைமுடியை விரித்துவிட்டு குனிந்து அமர்ந்து இருப்பாள்.

தன் கைகளில் ஒரு சவரக்கத்தி அவளுடைய தலைமுடியுடன் விளையாடிக்கொண்டிருக்கும் என ஆனந்தப்பட்டான். சீக்கிரத்திலேயே இழக்கப்போகும் தன்னுடைய தலைமுடி வசந்த் கைகளில் கொஞ்சி விளையாடுவதை பார்க்க அமுதாவிற்கும் சந்தோசமாக இருந்தது. ஆனால் கொஞ்சி விளையாடும் அவன் கைகலாலேயே மொட்டை அடிக்கப் படப்போவது சற்று வருத்தமாக இருந்தது


தன்னுடைய தலைமுடியின் விதியை நினைத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள். சில நிமிடங்கள் அவள் தலைமுடியை கொஞ்சியபின் வசந்த் எழுந்தான். அமுதா அவனிடம் ஒரு சீப்பு வாங்கி தன்னுடைய தலைமுடியை வாரிவிட ஆரம்பித்தாள். தன்னுடைய தலைமுடியை அள்ளி முன்னால் போட்டு மீண்டும் ஜடைபின்ன துவங்கினாள். அவள் பின்னலை போட்டு முடிக்கும்வரை வசந்த் அருகில் நின்று அவள் ஜடை பின்னும் அழகா ரசித்தான். அமுதா தன்னுடைய ஜடையை பின்னி முடித்ததும் நிமிர்ந்து வசந்த்தை பார்த்தால் அவனுடை கண்கள் இன்னமும் அவளுடைய தலைமுடிமீதே இருந்தது. அப்படியே திரும்பி நின்று தன்னுடைய ஜடையை பின்னால் தூக்கி போட்டாள். அவளுடைய ஜடை வசந்த்மேல் பட்டு அப்படியே ஆடிக்கொண்டிருந்தது. வசந்த் ஆடிக்கொண்டிருந்த அவள் ஜடையை கைகளால் பிடித்து நிறுத்தினான். தன்னுடைய தலைமுடி கொண்ட ஈர்ப்பு இன்னமும் அவனைவிட்டு விலகவில்லை என அமுதா புரிந்துகொண்டாள். ஆனால் இப்போது நேரமாகிவிட்டது. வனிதா எந்த நேரமும் வரலாம். அதனால் அமுதா வசந்த்திடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள். அமுதாவின் தலைமுடி வசந்த் மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.




அமுதா சென்றபின்னரும் அவளுடைய தலைமுடியை கையில் ஏந்திக்கொண்டிருப்பதுபோலவே வசந்த் உணர்ந்தான். பின்னர் அந்த நினைவுகளை கலைந்துவிட்டு எழுந்தான்.  வனிதா வந்துவிடுவாள் என சிறிது நேரம் காத்திருந்தான்.  பின்னர் தன்னுடைய வேலைகளை கவனிக்க துவங்கினான். சில நிமிடங்களில் மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது. வசந்த் கதவை திறந்தபோது தன்னுடைய கல்லூரிபையுடன் வனிதா அங்கு நின்றிருந்தாள். தன்னுடைய நீளமான தலைமுடியை ஒரே ஒரு க்லிப் மட்டும் போட்டு விரித்துவிட்டிருந்தாள். வசந்த் அவளை உள்ளே அழைத்தான். உள்ளே வந்ததும் காஃபீ டேபிள் மேல் தன்னுடைய பையை வைத்தாள்


அவள் பின்னால் வந்த வசந்த் அவள் தலைமுடியை ரசித்துக்கொண்டிருந்தான். அவனுடைய பார்வை அவள் தலைமுடி மீதே இருந்தது சற்று உருத்தலாக இருந்தாலும் அமைதியாக இருந்தாள் வனிதாஅவள் கூந்தலின் சில கற்றைகளை முன்னால் எடுத்துப்போட்டு தன்னுடைய விரல்களால் முடியை சுருட்டிக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் ஒருவித பதட்டத்துடன் இருக்கிறாள் என்பதை வசந்த் புரிந்துகொண்டான். அமுதாவை போல இவளாகவே தன்னுடைய தலைமுடியை கொடுக்கப்போவது இல்லை என்பது தெரிந்தது. முதலில் அவளை ஒரு சகஜ நிலைக்கு கொண்டுவர வேண்டும் பின்னர் மெல்ல அவள் தலைமுடியை பற்றி பேச வேண்டும் என முடிவெடுத்தான். அவளிடம் மெல்ல பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தான். முதலில் அவள் கல்லூரி இறுதி ஆண்டில் படித்துக்கொண்டிருப்பதை அறிந்தான். வனிதா தன்னுடைய பெற்றோரை இழந்து அக்கா மாமாவுடன் தங்கி கஷ்டமான சூழ்நிலையில் படித்துக்கொண்டிருப்பதை கூறினாள்


சிறுவயது முதல் நீளமான தலைமுடியுடனே வளர்ந்ததையும், இப்போது அவளுடைய மாமா அவள் படிப்பிற்காக பணம் திருடி அவளுடைய ஆசையான தலைமுடியை மொட்டை அடிக்க வேண்டிய நிலைமை வந்ததற்கு வருந்தினாள். கல்லூரி முடிந்ததும் சீக்கிரமாக வேலை வாங்கிக்கொண்டு தனியாக சென்றுவிட வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்ததாகவும் கூறினாள். இப்போது மொட்டை அடித்துக்கொண்டால், மீண்டும் தலைமுடி வளர்ந்து வேலைதேட சில மதங்கள் ஆகும் என்பதே அவளுடைய தலைமுடியை இழப்பதைவிட பெரிய கவலையாக இருந்தது. என்ன நடந்து இருந்தாலும் இப்போது தன்னுடைய தலையை மொட்டை அடித்துக்கொள்ளாமல் இருக்க முடியாது என்பதை உணர்ந்தாள். கல்லோரி முழுவதும் பிரபலமாக இருக்கும் அவளுடைய தலைமுடி சீக்கிரமே மொட்டை அடிக்கப்படும். ஆனால் இதுவரை அவள் தலையை மொட்டை அடிக்கப்போவது பற்றி யாரிடமும் சொல்லவில்லை. தினமும் இந்த அடர்த்தியான நீளமான தலைமுடியை விரித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவள், மொட்டை அடித்துக்கொண்டு சென்றாள் மற்றவர்கள் எப்படி பார்ப்பார்கள் என வனிதாவின் மனதில் ஒரு பயம் இருந்தது


அவள் கூந்தலை போட்டோ எடுத்து மகிழும் தோழிகளுக்கும், இந்த தலைமுடியில் மயங்கி நட்பு வட்டத்தில் இணைந்த ஆண் நண்பர்களுக்கும் என்ன பதில் சொல்ல முடியும். இவளுடைய அடர்த்தியான நீளமான தலைமுடியை பார்த்து பொறாமைப்பாடும் சில பெண்கள் வனிதா மொட்டை அடித்துக்கொண்டால் மிகவும் சந்தோசப்படுவார்கள். அவர்களுடைய கண்களில் கிண்டலும் கேலியும் அதிகரிக்கும்.  இதுவே அவள் மனதில் பெரிய வேதனையை கொடுத்தது. அதன் காரணமாகவே அவள் அதிகம் கோவம் கொண்டதாக கூறினாள். காலையில் மிகவும் கோவத்தை காட்டியதற்காக மன்னிப்பும் கேட்டாள். வசந்த் அவளை இரக்கத்துடன் பார்த்தாள்.



வசந்த் அலுவலகத்தில் நடந்த விஷயங்களை வனிதாவிடம் எடுத்துக்கூறினான். தன்னுடைய சின்ன வயசில் இருந்து வளர்ந்துவரும் தலைமுடி மீதான பற்றியும் எடுத்துக்கூறினான். பெண்கள் தலைமுடி மீதான Hair Fetish ஆர்வத்தையும் மோகத்தையும் அவளுக்கு விளக்கினான். முதலில் சற்று பைத்தியக்காரத்தனமாக தோன்றினாலும் அவன் தரப்பு விளக்கங்களை கவனித்துக்கேட்டுக்கொண்டிருந்தாள். நந்தினி அவனுக்கு அனுப்பிய போட்டோ மற்றும் வீடியோக்களை காட்டினான். கூடவே பார்த்திபன் மற்றும் நந்தினி ரகசியமாக பேசிய வீடியோக்களையும் காட்டினான். இப்போதுதான் தான் இந்த வலையில் எப்படி வந்து மாட்டிக்கொண்டேன் என வனிதா புரிந்துகொண்டாள்

தன்னுடைய தலைமுடியையும், தன்னுடைய அக்காவின் தலைமுடியையும், நந்தினியின் தலைமுடியையும் பார்த்திபன் தான் பயன்படுத்திக்கொண்டார் என்பதை உணர்ந்தாள். தான் ரகசியமாக வைத்திருந்த Hair Fetish உணர்வுகளை பயன்படுத்தியதையும், பெண்கள் தலைமுடி மீதான அடிமனது ஆசைகளையும் தீர்த்துக்கொள்ள வசந்த் இந்த சந்தர்ப்பத்தை உபயோகித்துக்கொண்டான் என்று வனிதா புரிந்துகொண்டாள். இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் வசந்த்தை குற்றம் சொல்வது நியாயம் இல்லை என்று தோன்றியது. வசந்த் தன்னுடைய கல்லூரி பருவத்தில் நீளமான தலைமுடி கொண்ட ரம்யாவை அடிக்கடி சீண்டிக்கொண்டிருந்ததையும் இப்போது அவளையே திருமணம் செய்துகொள்ளப்போவதையும் கூறினான். இன்னமும் ரம்யா நீளமான தலைமுடி வைத்திருப்பதை கூறினான்


அதை கேட்ட வனிதா ரம்யாவைஅதிர்ஸ்டக்காரிஎன்றாள். வசந்த் புன்னகைத்தான். கொஞ்சம் கொஞ்சமாக வனிதா ஆசுவாசமானாள். பின்னர் இருவரும் சேர்ந்து காஃபீ குடித்தனர். அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலை சற்று இணக்கமான சூழ்நிலையாக மாறியிருந்தது. வசந்த் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளிடம் மெல்ல அவள் தலைமுடியை தொட்டுப்பார்க்க அனுமதி கேட்டான். வனிதா முதலில் புன்னகைத்தாள் பின்னர் சம்மதம் தெரிவித்தாள். முதலில் சற்று முகம் கழுவிவிட்டு பின்னர் நிதானமாக தன்னுடைய தலைமுடியை தொடலாம் என்றாள். வசந்த் அவளுக்கு தன்னுடைய பாத்ரூம் இருக்கும் திசையை காட்டினான்.



வனிதா பாத்ரூம் உள்ளே சென்றதும் எதிரில் ஒரு கண்ணாடி இருந்தது. அதில் தன்னை உற்று கவனித்தாள். தன்னுடைய தலைமுடியை அள்ளி முன்னால் போட்டு அழகு பார்த்தாள். பின்னர் அப்படியே தன்னுடைய முடியை அள்ளி கொண்டை போட்டாள். பின்னர் முகல் கழுவிவிட்டு அருகில் இருந்த ஒரு துண்டை எடுத்து முகத்தை துடைத்தாள். அப்போதுதான் அருகில் இருந்த ஒரு சிறிய டப்பா திறந்து இருப்பதை கவனித்தாள். அது வசந்த் ஷேவீங் செய்ய பயன்படுத்தும் டப்பா. உள்ளே பார்த்தாள். ஒரு கத்தரிக்கோல் இருந்தது. அதை கையில் எடுத்தாள். மிகவும் அழகாக இருந்தது. மீண்டும் அந்த டப்பாவை பார்த்தாள். உள்ளே ஒரு சவரக்கத்தி இருந்தது. சற்று திரும்பி வசந்த் பின்னால் இருக்கிறானா எனபார்த்தாள். அவன் அங்கு இல்லை என்பதை உறுதி படுத்திக்கொண்டு அந்த சவரக்கத்தியை எடுத்தாள். மனத்திற்குள் ஒருவித உணர்ச்சி கிளம்பியது. மெல்ல அந்த சவரக்கத்தியை விரித்தாள். உள்ளே பிளேடு இல்லை. அந்த கத்தியை அப்படியே அவளுடைய தலையில் வைத்துப்பார்த்தாள். சில்லென இருந்தது. இவ்வளவு நேரம் ஆகியும் வனிதா வரவில்லையே என யோசித்த வசந்த் தற்செயலாக வந்து எட்டிப்பார்த்தான். வனிதா கையில் சவரக்கத்தியுடன் நின்று கொண்டிருந்தாள்


அவன் நிற்பது தெரியாமல் ஒரு கையில் சவரக்கத்தியை வைத்துக்கொண்டு இன்னொரு கையில் கத்தரிக்கோலை எடுத்தாள். கண்ணாடியில் நிமிர்ந்து பார்த்தபோது பின்னால் வ்சந்த் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.

பதட்டதில் அப்படிே வெளியே வந்தாள். கைகளில் இருப்பதை அவனிடம் காட்ட முடியாமல் திரும்பிக்கொண்டே வெளியே வந்தாள்வசந்த் அவன் கொண்டையை ரசித்துக்கொண்டே அவள் அருகில் வந்தான். அவள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்து இருந்ததால் தைரியமாக அவளுடைய தலைமுடியை தொட்டான். அவள் கொண்டையை அப்படியே பிடித்தான். அவளைப் பிடித்து தன்னை நோக்கி திருப்பினான். அவள் கைகளில் சவரக்கத்தியும் கத்தரிக்கோலும் இருந்தது


அவள் கொண்டையை அவிழ்த்துவிட்டான். அவளுடைய தலைமுடி வழிந்து விழுந்தது. மெல்ல அவள் முடியை அள்ளி முன்னால் போட்டு கோதிவிட்டான். கூச்சத்தில் தலையை குனிந்தாள். வசந்த் அவள் கைகளில் இருந்த சவரக்கத்தியையும் கத்தரிக்கோலையும் பார்த்துக்கொண்டேஇப்போ என்ன பண்ணலாம்…. முதல்ல உன்னோட முடியை வெட்டலாமா, இல்லனா உன்னோட தலையை மொட்டை இன்னைக்கே மொட்டை அடிக்கலாமா?” எனக்கேட்டான்

வனிதாவின் கண்களில் ஒரு குறும்பு தெரிந்தது. அவள் தன் கையில் இருந்த கத்தரிக்கோலை வசந்த்திடம் நீட்டினாள். வசந்த் அவளை அப்படியே அமரவைத்தான். அவள் தலைமுடியை அழகாக விரித்து விட்டான். அவளுடைய தலைமுடி அவளை சுற்றி தரையிலும் படர்ந்து கிடந்தது. அவன் கண் முன்னால் அவள் ஒரு கூந்தல் தேவதையாக அமர்ந்திருந்தாள். இப்போது அவளுக்கு மொட்டை அடிப்பதா இல்லை முடியை வேட்டுவதா என வசந்த் சற்று குழப்பாமானான். அவள் குனிந்தப்போது அவளை நிமிர்த்தி அவள் தலைமுடியை கையில் அள்ளி எடுத்தான். வனிதா பார்த்தபோது அவளுடைய தலைமுடியின் பாதியை அவன் பிடித்திருந்தான். அவள் கையில் இருந்த கத்தரிக்கோலை வாங்கி மெல்ல அவளுடைய முடியை நோக்கி கொண்டு வந்தான். தன்னுடைய அடர்த்தியான தலைமுடியில் அந்த கத்தரிக்கோல் முத்தமிடுவதை வனிதா பார்த்தாள்.

வனிதாவின் தலைமுடியை வசந்த் கைகளில் ஏந்தி வைத்துக்கொண்டு கத்தரிக்கோலால் அவளுடைய இதயத்துடிப்பை அதிகரித்துக்கொண்டிருந்தான். தான் ஆசையாய் வளர்த்த தலைமுடியை இழப்பதை நினைத்து அவள் கண்களில் கண்ணீர் வந்தது. அவள் கண்ணில் நீர் வடிந்து கொண்டிருப்பதை வசந்த் கவனித்தான். கத்தரிக்கோலை கீழே வைத்துவிட்டு அவள் கண்களை துடைத்து நிமிர்த்தினான்.வனிதாவின் தலைமுடியை இப்போது அவள் கண்ணீர் வடிக்கும்போது வெட்டிவிட அவனுடைய மனது இடமளிக்கவில்லை. 


தவிர இவளுடைய முடியை இப்போது வெட்டிவிட்டால், பின்னர் குட்டையான தலைமுடியுடன் அவளுக்கு மொட்டை அடிக்க வேண்டிய நிலை வரும். அதையும் வசந்த் விரும்பவில்லை. அவளுடைய நீளமான தலைமுடி சவரக்கத்தியால் மழிக்கப்பட்டு வழிந்துவிழும் அழகை ரசிக்க நினைத்தான். அவளை ஆசுவாசப்படுத்தி இன்னும் ஒரு வாரம் கழித்து நேரடியாக அவளுக்கும் அவளுடைய அக்கா அமுதாவிற்கும் ஒரே நாளில் மொட்டை அடிக்கப்போவதாக சொல்லி அனுப்பி வைத்தான். தன்னுடைய தலைமுடி இப்போதைக்கு வெட்டப்படவில்லை என்ற நிம்மதி இருந்தாலும், தன்னுடைய தலையை மொட்டை அடிப்பதற்கான தேதி குறிக்கப்பட்டதை பாரமான மனதுடன் ஏற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள் வனிதா.


வசந்த் குருஞ்செய்தி மூலம் நந்தினிக்கு அடுத்தவாரம் அவளுடைய தலையை மொட்டை அடிக்கப்போவதாகவும், தயாராக இருக்குமாறும் கூறினான். சில நிமிட இடைவெளியில் “ம்ம்” என அவளிடமிருந்து பதில் வந்தது. வனிதா வீட்டிருக்கு சென்றபின் வசந்த் வீட்டில் நடந்த விஷயங்களை அமுதாவிடம் தெரிவித்தாள். மூன்று பெண்களும் தங்களுடைய நாட்காட்டியில் மொட்டை அடிக்கும் தேதியை குறித்துவைத்து விட்டு இரவு உறங்க சென்றனர். மூவரும் வெவ்வேறு அறைகளில் வெவ்வேறு படுக்கைகளில் படுத்திருந்தாலும், தங்கள் தலைமுடியை தடவிக்கொண்டு தூங்கமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர். வசந்த் மட்டும் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். அவனுடைய கனவில் நந்தினி, அமுதா மற்றும் வனிதா ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் தங்களுடைய தலைமுடியை அவன் முன்னால் அமர்ந்து விரித்து விட்டு மொட்டை அடிக்க தயாராகிக்கொண்டிருந்தனர். ரம்யா அவளுடைய கையில் ஒரு சவரக்கத்தியை எடுத்து வசந்திடம் நீட்டிக்கொண்டிருந்தாள். அவளுடைய அருகில் ஷைலஜா புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள். வசந்த் கனவில் ஆனந்தமாக மூன்று பெண்களின் தலையையும் குனியவைத்து அவர்களுடைய நீளமான தலைமுடியை மொட்டை அடித்துக்கொண்டிருந்தான்.கீழே விழும் அவர்களின் தலைமுடி கற்றைகளை எடுத்து ரசித்தான்.




தன்னுடைய திருமண ஏற்பாடுகளை கவனிக்கவும், ரம்யாவை சந்திக்கவும் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு வசந்த் சென்றிருந்தான். ஷைலஜா இடைக்கால மேலாளராக  பணியாற்றிக்கொண்டிருந்தாள். வசந்த் அலுவலகத்தில் இல்லாத காரணத்தால் நந்தினி தன்னுடைய தலைமுடியின் மீது இப்போது இரண்டு கண்கள் இல்லாத சுதந்திரத்துடன் இருந்தாள். ஆனாலும் இன்னும் நான்கு நாட்களில் அவளுடைய தலையை மொட்டை அடித்துவிட்டு அலுவலகத்திற்குள் வருவதை நினைத்துப்பார்க்க கஷ்டமாக இருந்தது. இந்த இரண்டு நாட்களாக  பார்த்திபனும் அவலுவலகத்திற்கு வரவில்லை. 


மனத்தை திடப்படுத்திக்கொண்டு அவளுடைய மேலாளரிடம் கோவிலில் வேண்டுதல் இருப்பதாக  கூறி வெள்ளிக்கிழமைக்கு விடுமுறை விண்ணப்பித்தாள். அவர் என்ன வேண்டுதல் எனக்கேட்டபோது தன்னுடை நீளமான ஜடையை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டே “அதை திங்கள்கிழமை நான் ஆஃபீஸ் வரும்போது நீங்களே பாருங்க” என கூறினாள். அவரும் சிரித்துக்கொண்டே “நீ சொல்றத பார்த்தா திங்கள்கிழமை நீ மொட்டை தலையோடதான் வருவ போலிருக்கு” என சொல்லிக்கொண்டே விடுமுறைக்கு சம்மதம் தெரிவித்தார். அன்று மதியமே நந்தினி வேண்டுதலுக்காக விடுமுறை கேட்ட விஷயம் அலுவலகம் முழுவதும் பரவியது. அவளுடம் பழகும் சில அலுவலக தோழிகள் வந்து அவளை விசாரித்து விட்டு வாஞ்சையாக அவளுடைய ஜடையை தடவிப்பார்த்து கைகளில் ஏந்தி ரசித்தார்கள். இன்னும் சில ஆண்களும், பெண்களும் சற்று தூரத்தில் நின்று நந்தினியின் தலைமுடியை ரசித்துவிட்டு, அவள் மொட்டை அடிக்கும் விஷயத்தை மெல்லமாக பேசிக்கொண்டனர்.





 

 

 


Young college girl's low back length free hair style

Young college girl's low back length free hair style





















Telugu young college girl's low back length free hair style

Telugu young college girl's low back length free hair style



















Telugu young college girl's low back length free hair style

Telugu young college girl's low back length free hair style


















Telugu young college girl's low back length free hair style

Telugu young college girl's low back length free hair style