Thursday 24 October 2024

அரவிந்தின் அம்மா புவனா - நான்காம் பாகம்

புவனா ஒருமுறை சஹானாவின் தலை முடியின் நீளத்தையும் அடர்த்தியையும் பார்த்து அதிசயத்தாள். வாய் விட்டு சஹானாவிடம் சொல்லியும் விட்டாள். பதிலுக்கு சஹானாவும் புவனாவின் தலை முடியின் அழகை கூறினாள். நீளமான தலை முடியை பற்றி அடிக்கடி பேசுவதாலேயே நெருக்கமானார்கள். ஆனாலும் அரவிந்தின் ஆசைகளையும், தினமும் புவனாவிற்கு எண்ணை தேய்த்து விடும் ரகசியத்தையும் சஹானாவிடம் கூறவில்லை.  




சில நாட்களில் அடிக்கடி வீட்டிற்கு வருவதால், அர்விந்தும் சஹானாவும் அவ்வப்போது பேசிக் கொள்வர்.  அரவிந்த், சஹானா இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருந்தது. வீட்டில் ஒரு பெற்றோர் மட்டுமே இருந்தது. நெருங்கிய தோழன்/ தோழி இல்லாதது. புவனாவின் தலை முடியை ரசிப்பது. இருவருக்கும் ஒரே வயது, ஒரே வகுப்பு படிக்கிறார்கள் என தெரிந்ததும், இன்னும் சற்று அதிகமாக நண்பர்கள் ஆனார்கள். விஷ்ணுவை போலவே அர்விந்தும் அவளை அம்மு என்றே அழைத்தான். ஆனால் சஹானா அவனை “குண்டா” என்று தான் அழைப்பாள். முதலில் சற்று கோபித்தாலும் பின்னர் அதுவே இருவருக்கும் பழகிவிட்டது. சில முறை சஹானாவின் நீளமான தலைமுடி பற்றி புவனா அரவிந்திடம் கூறியிருக்கிறாள். அவனும் சஹானா வீட்டிற்கு வரும் போது அவளுடைய தலை முடியை கவனிக்க முயன்றான். ஆனால் அவள் எப்பொழுதும் முக்காடு போட்டு வருவதால் ஏமாற்றமே மிஞ்சியது.


அரவிந்த் தன்னுடைய Hair Fetish ஆசைகளை தாயிடம் பகிர்ந்து கொண்டு அவள் தலைமுடியை தினமும் தொட்டு விளையாட ஆரம்பித்த காலம் அது. ஒருநாள்  சஹானா  மாலை நேர தொழுகையை முடித்து விட்டு அரவிந்த் டியூசன் சென்றிருப்பான் என நினைத்து புவனாவிடம் பேசலாம் என வந்தாள். கதவை தட்ட நினைத்தவள், கதவு திறந்து இருப்பதை உணர்ந்து, கதவின் இடுக்கில், உள்ளே  நடப்பதை கவனித்தாள். உள்ளே அரவிந்த் புவனாவின் நீளமான ஜடையை அவனுடைய கையில் எடுத்து வைத்து அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தான். 


புவனா எந்த ஒரு கூச்சமும் இல்லாமல் மகனிடம் தலைமுடியை கொடுத்து விட்டு டீவீயின் முன் அமர்ந்து இருந்தாள். அரவிந்த் புவனாவின் ஜடையை பிரித்துவிட்டு அவள் தலையை மசாஜ் செய்து விட்டான். பின்னர் அவளுடைய தலைமுடிக்கு எண்ணெய்  தேய்த்து விட்டான். அரவிந்தின் கண்களில் ஒரு ஆர்வமும் , மகிழ்ச்சியும் தெரிந்தது. கதவை தட்டாமல் முழுவதுமாக கவனித்துக் கொண்டிருந்தாள். 




அரவிந்த் புவனாவின் தலைக்கு எண்ணெய் தேய்த்து முடித்த பின், புவனா தலைமுடியை அள்ளி கொண்டை போட்டாள். அவளுடைய கொண்டைக்கு அரவிந்த் முத்தம் கொடுத்தான். சஹானா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதை எப்படி எதிர்க்கொள்வது என தெரியவில்லை. கதவை தட்டாமல் அப்படியே திரும்ப சென்று விட்டாள். ஆனால் அவள் செல்லும் போது அரவிந்த் அவளை கவனித்தான்.

அன்று முழுவதும் அவள் சிந்தனைகளை அரவிந்த் புவானாவின் தலை முடியை கையில் எடுத்து வைத்திருந்த காட்சி தான் ஆக்கிரமித்திருந்தது. ஒரு வீட்டில் அம்மாவும் மகளும் இதுபோல நடந்து கொள்வது இயல்பு தான். ஆனால் அம்மாவும் மகனும் இருப்பது சற்றே வித்தியாசமாக பட்டது. மறுநாள் ஞாயிற்று கிழமை தந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்தாள். இந்த வீட்டிற்கு வந்த பின் சஹானாவின் முகத்தில் சற்று அதிகமாக மகிழ்ச்சியை உணர்கிறான் விஷ்ணு. அவ்வப்போது அவள் பேச்சில் புவனாவை பற்றி கூறுகிறாள் என்பதை கவனித்தான். ஆனால் இன்று அவள் முகத்தில் சிறு குழப்பம் இருப்பதை கவனித்தான். அவளிடம் மெல்ல பேச்சு கொடுத்தான்.


விஷ்ணு: அம்மு, இப்போலாம் நீ ரொம்ப சந்தோசமா இருக்கிற மாதிரி தெரியுது. இந்த புது வீடு பிடிச்சிருக்கா?


சஹானா: ஆமாப்பா… ரொம்ப பிடிச்சிருக்கு. இங்க எனக்கு தனியா ஒரு ரூம் இருக்கு-ல.


விஷ்ணு: ஹாஹாஹா… உனக்காகதான அப்பா இந்த வீட்டை கட்டினேன்.


சஹானா: தெரியும்ப்பா…


விஷ்ணு: வேற என்ன வேணும் அம்மு உனக்கு?


சஹானா: ஒண்ணும் இல்லப்பா இது போதும்.


விஷ்ணு: இன்னைக்கு உன்னோட முகத்துல கொஞ்சம் சோகம் தெரியுதே என்ன அச்சு அம்மு?


சஹானா: அம்மாவும் நம்ம கூட இருந்திருந்தா நல்லா இருக்கும். தனியா இருக்க கொஞ்சம் கஸ்டமா இருக்குப்பா. நீங்களும் தினமும் வீட்டுக்கு வர ரொம்ப நேரம் ஆகுது.


விஷ்ணு: அம்மு, அப்பாவோட வேலை அப்படி இருக்கு. என்ன பண்றது? உன்னை வீட்டில தனியா விட்டுட்டு போக எனக்கும் வருத்தமா தான் இருக்கு. ஆனா பக்கத்து வீட்டுல இருக்கிறவங்க கூட நீ நல்லா பழகுற தைரியத்துல தான் நான் நிம்மதியா இருக்கேன்.


சஹானா: ஆமாப்பா… அவங்க ரொம்ப நல்லவங்க…


விஷ்ணு: தெரியும்மா…


சஹானா: அவங்களுக்கும் அம்மா மாதிரி நீளமான முடி இருக்கு. நீங்க கவனிசீங்களா? அதுனாலாயே எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும்.


விஷ்ணு: ஹாஹாஹா… உனக்கும் உன்னோட அம்மா மாதிரி நீளமான முடிதான்…


சஹானா: அதுனால தான்ப்பா நான் இப்போலாம் நான் அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன்.


விஷ்ணு:  ஏன்டா அம்மு?


சஹானா: அம்மா இருந்தா அவங்களே எனக்கு தலைக்கு எண்ணெய்  வைச்சு தலைவாரி விடுவாங்க.


விஷ்ணு: ஆமா அம்மு…


சஹானா: நீங்க ஏன்ப்பா எனக்கு என்னை வைச்சு தலை வாரி விடக்கூடாது?


விஷ்ணு: ஹாஹாஹா… நானா? உன்னோட அம்மாவோட முடியை ஒரு தடவை சீவி விட முயற்சி பண்ணேன். உன்னோட அம்மா பயந்து ஓடி ஒளிஞ்சுகிட்டா. இன்னொரு தடவை இது மாதிரி பண்ணினா என்னோட முடியை கட் பன்னிருவேன்னு சொல்லிட்டா. அதுனால அதுக்கப்புறம் நான் முயற்சி பண்ணல. அவ ஜடை போட்டத்துக்கு அப்புறம் ரசிக்கிறதோட சரி…


சஹானா: ஹாஹா..


விஷ்ணு: நீ என் அந்த பக்கத்து வீட்டு ஆண்டியை கேட்க கூடாது?


சஹானா: அவங்களை இப்போலாம் நான் அம்மானு தான் கூப்பிடுறேன். நேத்து கூட இதை அவங்ககிட்ட கேட்கலாம்னு தோணுச்சு. அவங்க வீட்டு வாசல் வரைக்கும் போயிட்டேன். அப்புறம் திரும்பி வந்துட்டேன்.


விஷ்ணு: ஓ.. அதுதான் இப்போ உன்னோட சோகத்துக்கு காரணமா? நான் வேணும்னா அவங்ககிட்ட கேட்கட்டுமா?


சஹானா: இல்லப்பா.. நானே கேட்கிறேன்.

விஷ்ணு: அதுமட்டும் இல்லம்மா… அப்பா ஒரு வாரத்துக்கு வியாபார விஷயமா வெளியூர் போக வேண்டியது இருக்கு… நான் திரும்ப வர்ற வரைக்கும் உன்னை கொஞ்சம் பார்த்துக்க சொல்லணும்.



சஹானா: என்னப்பா… புதுசா ஒரு வாரத்துக்கு இப்படி ஊருக்கு போறீங்க?

விஷ்ணு: இப்போ தான் வியாபாரம் கொஞ்சம் அதிகமா இருக்கு. நீயும் வளர்ந்துட்டு இருக்க… உனக்காக நான் சேர்த்து வைக்க ஆரம்பிக்கணுமே. இப்போ நீ கொஞ்சம் பெரிய பொண்ணா ஆயீட்ட. இன்னும் கொஞ்ச வருஷத்துல காலேஜ்லாம் போகணும்.

சஹானா: சரிப்பா… இதையும் நான் பழகிக்கிறேன்.

மறுநாள் விஷ்ணு சஹானாவுடன் வந்து தான் ஒரு வாரம் வெளியூர் செல்வதை கூறி சஹானாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும், தேவைப்பட்டால் ஏதேனும் உதவி செய்யுமாறும் கூறினார். புவனாவும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டாள். அரவிந்த் மட்டும் சஹானாவை வைத்துக் கொண்டு எப்படி அம்மாவின் தலை முடியை தொடுவது என்று சற்று யோசித்தான். ஆனால் அதே நேரத்தில் இந்த ஒரு வாரத்தில் எப்படியும் அவளுடைய தலைமுடியை பார்த்து விட வேண்டும் என நினைத்தான். 

சஹானாவும் இந்த வாரத்தில் புவனாவின் கைகளால் தலைமுடிக்கு எண்ணெய் வைத்து, ஜடை பின்னிக் கொள்ள வேண்டும் என ஆசை. அதை விட முக்கியமாக அரவிந்த் எதற்காக புவனாவின் முடியை கொண்டு விளையாடுகிறான், புவனா எப்படி அவளுடைய தலைமுடியை அரவிந்திடம் கொடுக்க சம்மதித்தாள் என தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் எண்ணினாள்.



ஓரிரு நாட்கள் ஓடியது. மாலை பள்ளி முடிந்து வந்து தொழுகை செய்தபின் சஹானா புவனாவின் வீட்டிற்கு வருவாள். அவள் வரும்முன் அர்விந்த் புவனாவிற்கு எண்ணெய் தேய்த்து முடித்து ஜடை பின்னியிருப்பான். மாலை இருவரும் சேர்ந்து படிப்பார்கள். இரவு உணவு முடிந்ததும் சஹானா அவள் வீட்டிற்கு தூங்க சென்று விடுவாள். அன்று அரவிந்தின் அத்தை ஊரில் இருந்து வந்திருந்தாள். 


அரவிந்த் புவனாவின் தலைமுடியை அன்று தொடமுடியவில்லை. சஹானா சென்ற பின் புவனாவும் அரவிந்தின் அத்தையும் கீழே படுத்துக் கொண்டனர். அரவிந்த் மாடிக்கு சென்றான். மாடி அறைக்குள் சென்று விளைக்கை போடுவதற்கு முன் பக்கத்து வீட்டு மாடியில் விளக்கு எரிவதை கண்டான். சத்தமில்லாமல் இருட்டில் நின்று கவனித்தான். 

சஹானா அந்த அறைக்குள் நின்றிருந்தாள். தீவிர யோசனையுடன் நின்றிருந்தவள், மெல்ல இந்த அறையை நோக்கி பார்த்தாள். வழக்கம் போல வெளிச்சம் இல்லாமல் இருந்ததால் உள்ளே யாரும் இல்லை என நினைத்து மெல்ல தன்னுடைய முக்காடை கழத்தினாள். முதன் முறையாக அரவிந்தின் பார்வையில் சஹானாவின் தலைமுடி தெரிந்தது. அவளுடைய ஜடையை மூன்றாக மடித்து ஒரு க்லிப் மட்டும் போட்டிருந்தாள். 


அதனால்தான் அவள் முக்காடு போட்டிருக்கும் போது அவளுடைய  முடி நீளமாக வெளியே தெரியவில்லை. கொண்டை போட்டது போலவும் தெரியவில்லை. இருட்டில் இருந்தபடியே அவளுடைய தலைமுடியின் அழகை ரசித்தான். ஒற்றை பின்னலாக இருந்தாலே அடர்த்தியாக தெரியும் அவளுடைய தலைமுடி, இப்போது பெரும் அடர்த்தியாக தெரிந்தது. இவ்வளவு பக்கத்தில் இருந்தும் இந்த அழகிய கூந்தலை இவ்வளவு நாள் காணவில்லை என்பது அவனுக்கு வருத்தமாக இருந்தது.



சஹானா க்லிப்-பை கழத்தி தன்னுடைய ஜடையை நீளமாக விட்டாள். அவள் கழுத்து முதல் தொடைவரை ஒரே அளவு அடர்த்தியுடன் இருப்பது போல இருந்தது. சஹானாவின் தலைமுடியை ரசித்துக்கொண்டிருந்த அரவிந்த் தன்னுடைய அறையின் விளக்கை போட்டான். திடீரென பக்கத்து வீட்டு அறையில் விளக்கு எரிவதை உணர்ந்த சஹானா அவசரமாக தன்னுடைய முக்காடை எடுத்து போட்டாள். 

அந்த அறைக்குள் அரவிந்த் இருப்பது தெரிந்தது. மெல்ல வெளியே மொட்டை மாடிக்கு வந்தான். எப்பொழுதும் புவனாவும் அரவிந்தும் சேர்ந்தே இருப்பதால் அவள் மனதில் இருந்த சில விஷயங்களை பேசமுடியாமல் இருந்தது. இப்போது அரவிந்த் தனியாக இருப்பதால் அவனிடம் பேசி முயற்சி பண்ணலாம் என நினைத்தாள் சஹானா. ஓரிரு நிமிடங்கள் இடைவெளி விட்டு எதுவும் தெரியாததுபோல வெளியே வந்தாள். அவள் மறுபடி முக்காடு அணிந்து வந்தது அவனுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தனர்.





No comments:

Post a Comment