Monday 14 October 2024

அரவிந்தின் அம்மா புவனா - முதலாம் பாகம்

மாலை நேர டியூஷன் முடிந்து அரவிந்த் வீட்டிற்கு வந்தபோது, அவனுடைய அம்மா புவனா தரையில் அமர்ந்து காய்கறிகளை நறுக்கிக் கொண்டே டீவீயில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள். புவானாவின் கணவன் கணபதி வெளிநாட்டில் தங்கி வேலை செய்கிறான். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி, பின்னர் எலெக்ட்ரீசியானக வேலை செய்து, புவனாவை திருமணம் செய்தான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆளை பிடித்து அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றான். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாதம் விடுமுறைக்கு வருகிறான். எட்டு வருட காண்ட்ராக்ட். இப்போது சொந்தமாக கட்டிய அந்த வீட்டில், புவனாவும், மகன் அரவிந்த்-ம் இருக்கின்றனர். அரவிந்த் தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான். சுமாராகத்தான் படிப்பான். ஆனால் ஓரளவு மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுவான். புத்தகபையை வைத்துவிட்டு வந்து அவள் அருகில் நின்றான் அரவிந்த். இன்று முதல் புதிதாக ஒலிபரப்பாகும் புதிய சீரியலை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.



                                   

அரவிந்த் அவனுடைய அம்மாவின் ஜடையை நோட்டமிட்டான். வழக்கம்போல இன்றும் அவளுடைய அடர்த்தியான இடுப்பளவு முடியை ஜடையாக பின்னியிருந்தாள். காலையில்தான் தலைக்கு குளித்து இருந்தாள். அதனால் அவளுடைய தலைமுடி மிருதுவாக இருப்பதுபோல தெரிந்தது. அவளுடைய உச்சந்தலையில் அவனுக்கு பிடிக்காத அந்த இரண்டு நரைமுடி தெரிந்தது. எத்தனைமுறை சொல்லியும் புவனா அதை எடுக்க மறுத்துவிட்டாள். இன்று அவளுக்கு தெரியாமல் அவளுடைய தலையில் இருந்து அந்த இரண்டு முடியை வெட்டிவிடவேண்டும் என நினைத்தான். நேராக அறைக்குள் சென்ற அரவிந்த், ஒரு சிறிய கத்தரிக்கோலை எடுத்து ஒரு முறை வெட்டிப்பார்த்துவிட்டு பாக்கட்டில் போட்டுக்கொண்டு வெளியே வந்தான். வெளியே வரும்போது கையில் தேங்காய் எண்ணை பாட்டிலை எடுத்துவந்தான். புவனாவின் அருகில் இருந்த நாற்காலியை எடுத்து போட்டு அமர்ந்தான். அரவிந்த் கையில் இருக்கும் பாட்டிலை பார்த்ததும் அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு, வெட்டிய காய்கறிகளை எடுத்து அடுக்களையில் வைத்துவிட்டு வந்து அவன் முன் அமர்ந்தாள்.

 

பாட்டிலை கீழே வைத்துவிட்டு, அழகாக பின்னியிருந்த அவளுடைய ஜடையை கையில் எடுத்தான். தினமும் தொட்டுபார்ப்பதுதான் என்றாலும், அவனுடைய அம்மாவின் தலைமுடியை கையில் பிடித்திருப்பது அவனுக்கு உற்சாகமாக இருக்கும். இப்போதும் அதுபோலவே மிகவும் உற்சாகமானான். இன்னொரு காரணம், இன்னமும் பார்க்க இளமையாக இருக்கும் அவனுடைய அம்மாவின் தலையில் இருக்கும் அந்த இரண்டு நரைமுடியை இன்று வெட்டிவிடப்போகிற சந்தோஷம். மெல்ல புவானாவின் ஜடையை அவிழ்த்துவிட ஆரம்பித்தான். முழுவதுமாக அவள் ஜடையை அவிழ்த்துமுடித்தபின் அவளுடைய தலைமுடியை மொத்தமாக அள்ளி கையில் வைத்து அவளுடைய கூந்தல் வாசனையை நுகர்ந்து அனுபவித்தான். மூன்று ஆண்டுகளுக்குமுன் அரவிந்த் அவனுடைய Hair fetish ஆசைகளை பற்றி கூறியபோது சற்று தயங்கினாலும், பின்னர் ஒரே மகனின் ஆசையை நிறைவேற்ற புவனா அவளுடைய தலைமுடியை தொட்டுபார்த்து அனுபவிக்க அரவிந்த்-க்கு அனுமதி அளித்தாள். அப்போதெல்லாம் அரவிந்த் புவனாவின் தலைமுடியில் செய்யும் ஒவ்வொரு செயலும் கூச்சமாக இருக்கும். ஆனால் இப்போது பழகிவிட்டாள். அரவிந்த்-ன் கைகள் அவளுடையதலைமுடியை அள்ளி விளையாடிக்கொண்டிருக்க, புவனா டீவீயில் மூழ்கி இருந்தாள்.

அரவிந்த் மெல்ல அவள் தலைமுடிக்குள் கைவிட்டு கோதிவிட ஆரம்பித்தான். புவனாவும் மெல்ல பின்னால் சாய்ந்து அவனுக்கு ஏத்தபடி தலையை கொடுத்தாள். மெல்ல குனிந்து அவள் உச்சந்தலையில் முத்தம் கொடுத்தான். மகனின் கூந்தல் ஆசையை எண்ணி புவனா சிரித்தாள். ஒரு கையால் அவள் தலைமுடியை தடவிக்கொண்டே இன்னொடு கையை பாக்கட்டில் விட்டு கத்தரிக்கோலை தேடினான். மெல்ல சத்தம் இல்லாமல் கத்தரிக்கோலை வெளியே எடுத்தான். புவனா தீவிரமாக டீவீயில் இருக்கிறாள் என்பதை உறுதிபடுத்திக்கொண்டு இடது கையால் மெல்ல அந்த நரைமுடியை பிடித்தான்.  வலது கையில் இருந்த கத்தரிக்கோலை மெல்ல அவள் தலைமுடியை நோக்கி கொண்டுவந்தான்.புவனா ஏதோ கேட்க திடுக்கிட்டு கத்தரிக்கோலை பின்வாங்கினான்.





அரவிந்த்: என்னம்மா.. ஏதோ கேட்டீங்க?


புவனா: அரவிந்த், அம்மா உனக்கு பிடிச்சமாதிரி நடந்துகிறேனா?


அரவிந்த்: ஏன்மா இப்படி கேட்குறீங்க? நீங்க எனாக்கு பிடிச்சமாதிரிதான எல்லாமே செய்றீங்க…


புவனா: அப்போ, நீ மட்டும் ஏன் அம்மாவுக்கு பிடிக்காததை செய்யிற?


அரவிந்த்: என்னம்மா சொல்றீங்க?


புவனா: உன்னோட கையில இருக்கிற கத்தரிக்கோலை என்கிட்ட கொடு.


அரவிந்த்: அம்ம்மாமா…


புவனா: எனக்கு தெரியும் இப்போ உன் கையில ஒரு கத்தரிக்கோல் இருக்கு. என்னோட முடியை எனக்கு தெரியாம வெட்டனும்னு நீ உன்னோட பாக்கட்-ல ஒளிச்சுவைச்சு எடுத்துட்டு வந்திருக்க.


அரவிந்த்: சாரிம்மா.. இந்தாங்க.


புவனா: குட் பாய்.


அரவிந்த்: எப்படிமா கண்டுபிடிச்சிங்க?


புவனா: உன்னோட திருட்டுத்தனம் எனக்கு தெரியாதா?


அரவிந்த்: ப்லீஸ்மா… சொல்லுங்க.


புவனா: உள்ள நீ அந்த கத்தரிக்கோலை வெட்டிப்பார்க்கும்போதே சத்தம் வந்தது. வெளிய வரும்போது உன்னோட பாக்கட்ல அது தனியா வெளியே தெரிஞ்சது. இப்போ நீ அந்த கத்தரிக்கோலை எடுத்து என்னோட தலைமுடிமேல வைக்கும்போது இந்த பக்கம் நிழல்ல தெளிவா தெரிஞ்சது.


அரவிந்த்: ச்சே… இதைகூட நான் கவனிக்கலையே…


புவனா: (சிரித்துக்கொண்டே) நீ இன்னும் வளரனும்டா…. நீ சின்னப்பையன்னு அடிக்கடி நிரூபிக்கிற…


அரவிந்த்: ஹாஹா…


புவனா: உனக்கு ஏன்டா என்னோட அந்த முடிமேல அவ்ளோ கண்ணு..




அரவிந்த்: அம்மா.. நீங்க இன்னமும் பார்க்க சின்னபொண்ணுமாதிரிதான் இருக்கீங்க. ஆனா நீங்க கீழ உட்கார்ந்து இருக்கும்போது மேல இருந்து பார்த்தா, அந்த நரைமுடி, என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது.


புவனா: என்ன டிஸ்டர்ப் பண்ணுது?


அரவிந்த்: இவ்ளோ அழகான உங்களோட அந்த தலைமுடி-ல அந்த நரைமுடி அசிங்கமா இருக்கு. உங்ககிட்ட சொன்னா நீங்களும் வெட்டமாட்டேன்னு சொல்லிட்டீங்க. அதுனாலதான் உங்களுக்கு தெரியாம உங்களோட முடியை வெட்டலாம்னு நினைச்சேன்.


புவனா: ஹாஹாஹா…


அரவிந்த்: என்னம்மா சிரிக்கிறீங்க.


புவனா: பின்ன என்னடா.. அம்மாவுக்கு வயசு ஏறுதுல… அப்புறம் நரைக்காம எப்படி இருக்கும்.


அரவிந்த்: அதுக்காக அது அப்படியே இருக்கணுமா?… உங்களுக்கு ஒண்ணும் அவ்ளோ வயசு ஆகல… சின்னவயசுல கல்யாணம் ஆனதுனால உங்களுக்கு அப்படி தோணுது.


புவனா: வேற என்ன பண்ண சொல்ற?


அரவிந்த்: எனக்காக உங்களோட முடியை தரக்கூடாதா?


புவனா: டேய் கண்ணா… என்னோட மொத்த முடியையும் உன்கிட்டதான கொடுக்கிறேன்… அப்புறம் ஏன் அந்த ரெண்டு முடியை வெட்டனும்னு துடிக்கிற?


அரவிந்த்: நீங்க ஏன் அந்த ரெண்டு முடியை வெட்ட விட மாட்டேன்னு சொல்றீங்க?


புவனா: நான் ஸ்கூல் படிக்கும்போது இருந்தே எனக்கு இருக்குடா… அது எனக்கு ராசியான முடி… இப்போவரைக்கும் அந்த ரெண்டு முடியை தாண்டி எனக்கு வேற முடி நரைக்கல.


அரவிந்த்: அதுக்காக?


புவனா: அது மட்டும் இல்ல… அப்போ இருந்தே என்னோட முடி அழகா இருக்குனு நிறையபேர் சொல்லுவாங்க… அதுனால அந்த ரெண்டு நரைமுடி திருஸ்டிக்காக இருக்கட்டும்னு என்னோட அம்மா சொல்லுவாங்க.


அரவிந்த்: ரொம்ப தான் sentiment  போங்க…


புவனா: என்னோட முடி எனக்கு sentiment  தான்டா


அரவிந்த்: ம்ம்ம்…


புவனா: சரி.. என்னோட தலைமுடிக்கு இப்போ எண்ணை தேய்ச்சு விடுறியா?


அரவிந்த்: இல்லம்மா…


புவனா: இல்லையா.. அப்புறம் எதுக்குடா இப்போ தேங்காய் எண்ணை பாட்டிலை தூக்கிட்டு வந்த?


அரவிந்த்:சும்மா… அப்போதான நீங்களே வந்து உங்களோட முடியை என்கிட்ட கொடுப்பீங்க…


புவனா: கண்ணா… நீ எப்போ வேணும்னாலும் என்னோட முடியை தொடலாம். உனக்கு இல்லாத உரிமையா?




அரவிந்த்: இன்னைக்கு காலைல நீங்க தலைக்கு குளிச்சிங்க-ல… உங்க முடி நல்ல வாசனையா இருக்கு. அதுனால இப்போ என்னை வேணாம். நான் உங்க முடியை நல்லா சந்தோஷமா என்னோட கையில பிடிச்சு ரசிக்கப்போறேன்.


புவனா: எடுத்துக்கோடா… அம்மாவோட தலைமுடி உனக்கு தான்.

அரவிந்த்:  தாங்க்ஸ்மா…


புவனா தன்னுடைய தலைமுடியை அரவிந்திடம் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தாள். அரவிந்த், ஆசையோடு அவள் முடிக்கு முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தான்.

 

ஒரே மகன்தான் என்றாலும், ஒரு ஆண்பிள்ளையின் கையில் தன்னுடைய தலைமுடியை கொடுப்பது சாதாரண விஷயம் அல்ல. டீன் ஏஜ் வந்த பிறகு, ஆண் பிள்ளைகள் தாயிடம் இருந்து சற்று விலக ஆரம்பிக்கும் காலகட்டத்தில், ஆரவிந்த் நேர் எதிராக அவன் அம்மாவிடம் அதிக நெருக்கமாக பாசமானான். முதல் காரணம், அப்பா வெளிநாடு சென்றது. இன்னொரு காரணம் அவன் தன்னுடய Hair fetish ஆசைகளை அவளிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தது. இயல்பாக எளிதில் நடக்காத அந்த விஷயம் அவர்கள் வாழ்க்கையில் தற்செயலாக நடந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தாள் புவனா.



No comments:

Post a Comment