Monday 16 September 2024

வசந்தகாலம் - ஒன்பதாம் பாகம்

வசந்த்: இப்படியே அமைதியா இல்லாம கொஞ்சம் பேசலாமா


பார்த்திபன்: சொல்லுங்க ஸார்.


வசந்த்: நீங்க ரெண்டு பேரும் எவ்ளோ நாளா இந்த திருட்டு  வேலையை செய்துட்டு இருக்கீங்க?


பார்த்திபன்: இப்போ தான் ஸார். ஒரு எட்டு மாசம் இருக்கும்


வசந்த்: என்ன கூந்தல்ராணி… அவர் சொல்றது உண்மை தானா?




நந்தினி: ஆமா ஸார். உண்மைதான்.


வசந்த்: நீங்க எவ்ளோ திருடி இருக்கீங்கனு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?


நந்தினி: இருக்கு ஸார். மொத்தம் 7 லட்சம்.


வசந்த்: சூப்பர்…  பார்த்திபன் ஸார், நந்தினி சொல்லுற கணக்கு சரியா?


பார்த்திபன்: சரிதான் ஸார்.


வசந்த்: இன்னும் 5நாள்-ல அதை திருப்பி கொடுக்கணும். நீங்க ரெண்டு பெரும் அதுக்கு ரெடியா.


பார்த்திபன்: அய்யோ ஸார். ஐஞ்சு நாள்ல எப்படி முடியும்.


வசந்த்: இன்னும் ஐஞ்சு நாள்-ல ஆடிட்டிங் முடிக்கணும்.


நந்தினி: நீங்க இன்னும் கொஞ்சம் டைம் வாங்கி கொடுங்க ஸார்.


வசந்த்: சரி.. இன்னும் எவ்ளோ நாள் வேணும்.


பார்த்திபன்: ஒரு இரண்டு, மூணு மாசம்.


நந்தினி: எனக்கும் அதுவுமே ரொம்ப கம்மி தான்.


வசந்த்: ஆனா என்கிட்ட அவ்ளோ நாள் இல்ல.


பார்த்திபன்: ஸார்… உங்களுக்கு என்ன வேணும்?


வசந்த்: உங்களோட திருட்டுல எனக்கு பங்கு தர போறீங்களா?


பார்த்திபன்: நீங்க இதை நேர்மையா பண்ணுறதா இருந்தா இந்நேரம் எங்களை வேலையை விட்டு தூக்கி இருப்பீங்க.. இல்லைனா  போலீஸ்ல சொல்லி இருப்பீங்க. ஆனா நீங்க ரெண்டுமே பண்ணலை.


வசந்த்: உண்மை தான்.. ஆனா அதெல்லாம் நீங்க என்னை உங்க வலைல விழ வைக்க திட்டம் போடாம இருந்திருந்தீங்கனா..


நந்தினி: ஸார்… நாங்க பின் விளைவுகளை யோசிக்கமா தெரியாம பண்ணிட்டோம். தயவு செய்து எங்களை மன்னிச்சீடுங்க.


வசந்த்:  உனக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம் நந்தினி. ஆனா பார்த்திபன் சாருக்கு இதெல்லாம் நல்லாவே தெரியும். இல்லைனா உனக்கு ப்ளான்-B ஐடியா கொடுப்பாரா?


நந்தினி: ஸார்.. அது இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கலை.


வசந்த்: நீ எதிர்பார்க்கலை நந்தினி. ஆனா அவர் எதிர்பார்த்தார்.


பார்த்திபன்: இல்லை ஸார்.


வசந்த்: பார்த்திபன் ஸார்… இன்னமும் நந்தினிக்கு உண்மை தெரியாது போல.. அதுனால தான் இப்போ நல்லா மாட்டிகிட்டா.


நந்தினி: என்ன ஸார் சொல்லுறீங்க?


வசந்த்: நந்தினி உங்களோட திட்டம் என்ன.


பார்த்திபன்: அதை நான் சொல்லுறேன் ஸார்.




வசந்த்: இருங்க பார்த்திபன் ஸார். அவளே சொல்லட்டும்.


நந்தினி: கம்பனி ஆடிட்டிங் முடிஞ்சு, மேனேஜ்மெண்ட் அப்ரூவ் பண்ணுற வரைக்கும்  நான் என்னோட முடியை உங்ககிட்ட  கொடுத்து உங்களை திசை திருப்பணும்.


வசந்த்: சூப்பர். இந்த யோசனை யார் சொன்னது.


நந்தினி: பார்த்திபன் ஸார் சொன்னார். மொதல்ல எனக்கு ரொம்ப கூச்சமா இருந்தது. அப்புறமா வேற வழியில்லாம சம்மதிச்சேன்.


வசந்த்: தப்பு பண்ணினது ரெண்டு பேரும் தான… எதுக்கு நீ மட்டும் இந்த திட்டத்துல இருக்கணும்னு கேட்டியா?


நந்தினி: இல்ல..


வசந்த்: ஏன்?


நந்தினி: அந்த 7 லட்சத்துல, 6 லட்சம் நான் தான் எடுத்துக்கிட்டேன். எனக்கு ஒரு அவசர பணக்கஷ்டம். எனக்கு உதவி பண்ண அவர் ஒரு லட்சம்  எடுத்துக்கிட்டார். எனக்காக திருடப் போய் ரெண்டு பேரும் மாட்டிக்க வேணாம்னு நான் மட்டும் உங்ககிட்ட வந்து என்னோட தலை முடியை கொடுத்து உங்களை மயக்கி காரியத்தை சாதிச்சுக்க நினைச்சோம்.


வசந்த்: அருமை… உனக்கு ரொம்ப நல்ல மனசு நந்தினி. ஆனா ரெண்டு பேரு சேர்ந்து தப்பு பண்ணினா இரண்டு பேருக்கும் தான் தண்டனை  தரணும். சரியா பார்த்திபன் ஸார்.


பார்த்திபன்: ஸார் என்னோட பங்கு இதுல கொஞ்சம் தான… நான் என்ன பண்ணனும்-னு சொல்லுங்க. நான் என்னோட ஒரு லட்சத்தை திருப்பி கொடுக்கிறேன்.


வசந்த்: இல்ல பார்த்திபன். உங்களோட பங்கு ரொம்ப ஜாஸ்தி. பாவம் நந்தினி. அவளுக்கு  தெரியாது போல…  ஆனா நீங்க என்னை ஏமாத்த முடியாது.


பார்த்திபன்: என்ன ஸார் சொல்லுறீங்க.


வசந்த்: உங்களோட உண்மையான பங்கு என்னன்னு எனக்கு தெரியும். நந்தினியை விட நீங்க தான் பெரிய தொகையை திருடி இருக்கீங்க.


நந்தினி: அய்யோ.. என்ன பார்த்திபன் ஸார் இது.


பார்த்திபன்: இல்ல நந்தினி… இவர் போய் சொல்றாரு.


வசந்த்: ஓ..அப்படியா… சரி… நீங்க திட்டம் போட்ட வீடியோவாய் உங்க ரெண்டு பேரு கிட்டயும் காட்டினேன். இன்னொரு வீடியோ இருக்கு.


நந்தினி: என்ன ஸார் அது.


வசந்த்: பயப்படாத நந்தினி.. அது உனக்கு இல்ல. ஸார்-க்கு.


பார்த்திபன்: என்ன ஸார்.


வசந்த்: நீங்க நந்தினியோட தலை முடியை வைச்சு எனக்கு கட்டம் கட்ட நினைச்சீங்க. ஆனா இவளோட தலைமுடியை வைச்சு எனக்கு வலை விரிக்கனும்னு எப்படி தெரிஞ்சதுனு யோசிச்சு பார்த்தேன். உங்களை நல்லா நோட்டம் விட்டதுல இன்னொரு உண்மை தெரிஞ்சது. நீங்க என்னைப் பத்தி அந்த ப்ரோக்கர் சுப்புகிட்ட பேசின வீடியோ கிடைச்சுது. எனக்கே பெரிய ஷாக் தான்.


நந்தினி: என்ன ஸார் அது.


வசந்த்: ஒண்ணும் இல்ல நந்தினி. மொத்தம் 18 லட்சம் பார்த்திபன் சுருட்டி இருக்கார். உன்கிட்ட சொன்னது வெறும் 7 லட்சம் தான்.


நந்தினி: அய்யோ.. என்ன பார்த்திபன் ஸார் இது?


வசந்த்: இன்னும் இருக்கு நந்தினி… எனக்கு பொண்ணுங்க தலையை மொட்டை அடிக்கிற ஆசை இருக்குனு அவருக்கு தெரியும். அவரோட 12 லட்சத்துக்கும் சேர்த்து உன்னோட தலை முடியை எனக்கு கொடுத்து  என்னோட வாயை மூடலாம்ன்னு திட்டம் போட்டிருக்கார்.


நந்தினி: ??!!!

வசந்த்: உன்னோட 6 லட்சத்துக்கு நீ உன்னோட  நீளமான தலை முடியை என்கிட்ட கொடுத்து மொட்டை அடிக்கணும்னா…  அவரோட 12 லட்சத்துக்கு ரெண்டு பேர் அவங்களோட நீளமான தலை முடியை எனக்கு கொடுக்கணும். புரியுதா பார்த்திபன் ஸார்.


பார்த்திபன்: நீங்க என்ன கேட்க வறீங்கன்னு எனக்கு புரியுது ஸார். ஆனா எப்படி என்னோட பொண்டாட்டிகிட்டயும், அவ தங்கச்சிகிட்டயும் எப்படி அவங்க தலை முடியை மொட்டை அடிக்க சொல்றது.


நந்தினி: அப்போ என்ன தைரியத்துல என்னோட  தலையை மொட்டை அடிக்க சொன்னீங்க.


வசந்த்: அதை  நீங்க தான் முடிவு பண்ணனும். உங்களுக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கு.


பார்த்திபன்: முயற்சி பண்றேன் ஸார்.


வசந்த்: தாராளமா பண்ணுங்க. வச்சா குடிமி, அடிச்சா மொட்டை தான். மூணு பேரோட தலைமுடியும் எனக்கு வேணும். என்னோட கையாள அவங்களுக்கு மொட்டை அடிக்கணும். இல்லைனா யாரும் மொட்டை அடிக்க வேணாம். சட்டப்படி போகலாம். ஜெயிலுக்கு போக வேண்டியது வந்தாலும் வரலாம். தயாரா இருங்க.


நந்தினி:  அய்யோ ஸார். தயவு செய்து அப்படியெல்லாம் சொல்லாதீங்க. எனக்கு இப்போ வேற  வழியில்ல.. நான் என்னோட தலை முடியை உங்ககிட்டயே கொடுக்கிறேன். நீங்க என்னோட தலையை மொட்டை அடிச்சுக்கோங்க.


வசந்த்: அவசரப்படாத நந்தினி. ஸார் ஒரு நல்ல முடிவா சொல்லுவார். அது வரைக்கும் உனக்கு மொட்டை இல்ல.  உன்னோட தலை முடி இப்போ உனக்கு சொந்தம் இல்ல… எனக்கு தான் சொந்தம். ஆசை தீர உன்னோட முடியை தொட்டுப் பார்த்துக்கோ.


பார்த்திபன்: சரி ஸார். ரெண்டு நாளைக்குள்ள நான் உங்களுக்கு பதில் சொல்லுறேன்.


வசந்த்: சரி  அப்போ நீங்க கிளம்புங்க. எனக்கு நந்தினிக்கிட்ட கொஞ்சம் பேசணும்.


பார்த்திபன்: சரி ஸார்.


நந்தினி: ஸார்… என்னோட புருஷன் சீக்கிரம் வந்திடுவார். நீங்களும் கிளம்புங்க.


வசந்த்:  கவலைப்படாத நந்தினி. கொஞ்ச நேரம்தான்.


பார்த்திபன் அங்கிருந்து கிளம்பியதும் நந்தினி கதவை சாத்தி விட்டு உள்ளே வந்தாள். வசந்த்தின் எதிரே அமர்ந்தாள். அவளை அழைத்து அவன் முன்னாள் திரும்பி உட்கார சொன்னான். அவள் எழுந்து வந்து திரும்பி அமர்ந்தாள். வசந்த் நந்தினியின் அடர்த்தியான கொண்டையை தடவிக் கொடுக்க ஆரம்பித்தான்.  தன்னுடைய தலைமுடியை மொத்தமாக அவன் கைகளுக்குள் பிடித்து இருந்தது அவளுக்கு  சற்று கூச்சமாக இருந்தது. தன்னுடைய முகத்தை அந்த அடர்ந்த தலை முடிக்குள் புதைத்து இன்பத்தை அனுபவித்தான். 

பின்னர் மெல்ல அவள் கொண்டையை அவிழ்த்து  விட்டான். அவளுடைய ஜடை அவன் கைகளில் இருந்து தவழ்ந்து, கீழே சரிந்தது. அவளுடைய ஜடையை தன்னுடைய விரல்களால் ஸ்பரிசித்தான். அந்த மென்மையான கூந்தல் அவனுக்குள் ஊடுருவியது. பின்னால் அவள் ஜடையை கழுத்தின் அருகில் பிடித்து அள்ளி முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். தன்னுடைய தலை முடியை மொத்தமாக வசந்த் கைகளில் கொடுத்து விட்டு தவிப்புடன் நந்தினி அமர்ந்திருந்தாள். வசந்த் அவளுடைய ஜடையை அவிழ்த்து விட ஆரம்பித்தான். அவள் தலைமுடிக்குள் விரல்களை விட்டு கோதி விளையாடினான். ஆசை தீர அரைமணி நேரத்திற்கும் மேல் விளையாடினான். நந்தினி ஒரு பொம்மை போல அவன் முன்னால் இருந்தாள்.


சிறிது நேரம் ஆன பின்னர் வசந்த் அவளிடம் சற்று நீதானமான குரலில் பேசினான். அவன் குரலில் இப்போது மிரட்டல் இல்லை. நந்தினி தன்னுடைய தலை முடியை அள்ளி முன்னால் போட்டு விட்டு எழுந்து மீண்டும் அவன் எதிரில் அமர்ந்தாள். நந்தினி அவளுடைய அடர்த்தியான முடியை எடுத்து முன்னால் போட்டு இருப்பதை பார்த்த வசந்த் உண்மையில் இவள் “கூந்தல்ராணி” தான் என மனத்திற்குள் நினைத்துக்கொண்டான். வழியில் அவள் கணவனை சந்தித்ததை சொன்னான். அவர்களுக்குள் இருந்த பணப் பிரச்சனையை பார்த்திபன் பயன்படுத்திக் கொண்டதை நந்தினியின் கணவன் அறிந்திருந்தாலும், வேளையில்லாமல் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை எனக் கூறி வருத்தப் பட்டத்தை கூறினான். 


நந்தினி அவளுடைய கணவனின் இயலாமையை புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். நந்தினியின் இந்த அலுவலகப் பிரச்சனையும், அவனுக்கு ஒரு வேலையும் கிடைத்தால், இருவரும் மொட்டை அடித்துக் கொள்வதாக வேண்டியிருக்கானாம். ஆனால் நந்தினி அவளுடைய நீளமான தலை முடியை மொட்டையடிக்க சம்மதிக்க மாட்டாள் என நினைத்து அவளிடம் சொல்ல தயங்குவதாக கூறியதையும் வசந்த் கூறினான். 


வசந்த் நந்தினியிடம் பேசி சம்மதிக்க வைப்பதாக அவள் கணவனிடம் கூறியதையும் சொன்னான். நந்தினி மொட்டை அடித்துக் கொண்டால் எல்லாப் பிரச்சனையும் முடிவுக்கு வரும் என வசந்த் அவனிடம் கூறியது அவள் கணவனுக்கு புரியவில்லை. ஆனால் நந்தினிக்கு புரிந்தது. நந்தினி அவளுடைய நீளமான தலை முடியை மொட்டை அடித்துக் கொடுத்தே ஆகவேண்டும். அவளையும் அறியாமல் அவளுடைய கைகள் அவள் தலை முடியை தடவிப்பார்க்க ஆரம்பித்தது. நந்தினி மெல்ல அழத் தொடங்கினாள். வசந்த் எழுந்து அவள் தலைமுடியை தடவிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.




இரண்டு நாட்கள் கழித்து பார்த்திபன் வசந்திடம் அவனுடையை மனைவியையும், அவள் தங்கையையும் மொட்டை அடிக்க சம்மதிக்க வைத்து விட்டதாக கூறினான்.  வசந்த்  கேட்ட  வார்த்தைகளை அவனால் நம்ப முடியவில்லை. ஆனால் பார்த்திபன் மனைவி வசந்திடம் சற்று தனிமையில் பேச வேண்டும் என கேட்டதையும் கூறினான். வசந்த் சற்று குழப்பம் ஆனான். இறுதியில் சம்மதித்தான். ஏற்கனேவே அவளை பார்த்த அதே கோவிலின் தெப்பக்குளம் அருகில் இருவரும் சந்தித்தனர். வசந்த் அவளை எளிதாக அடையாளம் கண்டு கொண்டான். அவளிடம் சென்று அவன் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். அவளும் தன்னை அமுதா என அறிமுகப்படுத்திக் கொண்டாள். தன்னுடையை தலை முடியை மொட்டை அடித்து க்கொடுக்கவேண்டும் என பார்த்திபன் கூறிய போது எவ்வளவு கோபம் வந்ததோ அதே கோபத்தை வசந்த்திடமும் அமுதா காட்டினாள். 






3 comments:

  1. அடுத்த கதை கொஞ்சம் சீக்கிரமா போடுங்க ப்ரோ

    ReplyDelete