Saturday 31 August 2024

வசந்தகாலம் - ஐந்தாம் பாகம்

ஷைலஜா: இதுக்கு முன்னாடி என்னை பிடிக்காதா?


வசந்த்: ச்சே..ச்சே.. அப்படியில்ல…


ஷைலஜா: அப்போ இதுக்கு முன்னாடி என்கிட்ட என்ன பிடிக்கும்…


வசந்த்: கொஞ்சம் வெளிப்படையா சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க… உங்களோட முடி ரொம்ப பிடிக்கும்.


ஷைலஜா: என்னோட முடியையா?


வசந்த்: ஆமா.. உண்மையிலேயே உங்களோட முடி ரொம்ப அழகா இருக்கு…


ஷைலஜா: ஹாஹா… தாங்க்ஸ். அதுனால தான் ரொம்ப நேரமா அங்கயிருந்த போட்டோவுல  என்னோட முடியை பார்த்துட்டே இருந்தியா?


வசந்த்: ஆமா… இப்போ இருக்கிறதை விட அப்போ உங்களோட முடி இன்னும் நீளமா, அழகா இருக்கு.


ஷைலஜா: அப்போ எனக்கு சின்ன வயசு… முடியோட வளர்ச்சி அதிகம்… இப்போ அந்த அளவுக்கு  இல்ல…


வசந்த்: அதுனால தான் அந்த போட்டோவை பார்த்து ரசிச்சிட்டு இருந்தேன்.


ஷைலஜா: அப்புறம் வேற என்ன நினைச்ச?


வசந்த்: நான் ஏன் உங்களைவிட சின்ன பையனா பொறந்தேன்னு யோசிச்சேன்.


ஷைலஜா: ஹாஹா.. எதுக்கு அந்த முடியை பார்த்து என்னை கல்யாணம் பண்ணலாம்னு தோணுச்சா?


வசந்த்:  ஆமா…


ஷைலஜா: ஹேய்… உனக்கே இதெல்லாம் ஓவரா இல்லயா… இந்த முடியை பார்த்து எப்படி கல்யாணம் வரைக்கும் தோணும்?


வசந்த்: எனக்கு தோணுது…  வேற எப்படி இந்த மாதிரி நீளமான முடியை நான் தொட்டு பார்க்கிறது?


ஷைலஜா: ஹாஹா… உனக்கு இந்த நீளமான முடியை தொடணும் அவ்ளோதான ஆசை…


வசந்த்: தொடணும்.. அது மட்டும் இல்ல.. கொஞ்சம் விளையாடணும்.


ஷைலஜா: அதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணனும்? நேரடியா நீளமான முடி இருக்கிற பொண்ணா பார்த்து கேட்க வேண்டியதுதான…


வசந்த்: அதெப்படி ஒத்துக்குவாங்க….


ஷைலஜா: அதெல்லாம் சொல்லுவாங்க..  நீ எப்போவாவது நம்ம ரம்யாகிட்ட கேட்டிருக்கியா?


வசந்த்: இல்ல.. கேட்டாலும் அவ ஒண்ணும் சொல்லமாட்டா.. சரின்னு சொல்லுவா


ஷைலஜா:  அப்புறம் என்ன?


வசந்த்: அவ என்னோட ஜூனியர்.. அதுனால ஓகேன்னு சொல்லுவா…


ஷைலஜா: கண்டிப்பா நீ உனக்கு தெரியாத பொண்ணுங்ககிட்ட போய் அவங்களோட தலை முடியை தொட்டுப் பார்க்க கேட்க போறது இல்ல.


வசந்த்: ஆமா…


ஷைலஜா: முயற்சி பண்ணு…


வசந்த்: இப்போவே முயற்சி பண்றேன்,…


ஷைலஜா: ரொம்ப அவசரப்படாத… அவ நாளைக்கு சாயங்காலம் தான் ஊருல இருந்து திரும்பி வருவாள்.


வசந்த்: அது எனக்கு தெரியும்…


ஷைலஜா: அப்புறம் இப்போ எப்படி முயற்சி பண்ணுவ?


வசந்த்: இப்போ நான் உங்ககிட்ட தான கேட்க போறேன்.


ஷைலஜா: பார்த்தியா.. ஐடியா கொடுத்த என்னோட தலையிலேயே கை வைக்க பார்க்கிற?

வசந்த்: ஹாஹா… பார்த்தீங்களா.. ஐடியா கொடுத்த நீங்களே சம்மதிக்க மாட்டேன்னு சொல்றீங்க

ஷைலஜா: நான் எப்போ மாட்டேன்ன்னு சொன்னேன்.

வசந்த்: அப்போ நான் உங்க முடியை தொடலாமா?

ஷைலஜா: தாராளமா… முடியை கொடுக்கிறதுல என்ன இருக்கு…

வசந்த்: என்ன இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க

ஷைலஜா: உனக்கு பிடிச்சிருக்குனா நீ தாராளமா என்னோட முடியை தொட்டுப் பார்த்துக்கோ… நான் ஒண்ணும் அதுல குறைஞ்சு போயிட மாட்டேன்…

வசந்த்: அய்யோ.. ரொம்ப தாங்க்ஸ்

ஷைலஜா: சரி.. இப்போ நீ என்னோட முடியை என்ன பண்ணனும்னு சொல்லு…

வசந்த்: முதல்ல என்னோட கையாள உங்களோட முடியை எடுத்து தொட்டு பார்க்கணும்..


ஷைலஜா: அப்புறம்:

வசந்த்: உங்களோட ஜடையை நான் அவிழ்த்து விடலாமா?

ஷைலஜா: தாராளமா… நானே இப்போ என்னோட ஜடையை அவிழ்த்து விடனும்னு நினைச்சேன்.

வசந்த்: எதுக்கு?

ஷைலஜா: தலைக்கு எண்ணை தடவணும்.

வசந்த்: அப்போ நானே உங்களோட தலைமுடிக்கு எண்ணை தடவட்டுமா?

ஷைலஜா: ஹாஹா.. சரி… ஆனா ஒரு கண்டீசன்.

வசந்த்: என்ன?

ஷைலஜா: என்னோட முடிக்கு எண்ணை தடவி அதுக்கு அப்புறம் மறுபடி என்னோட முடியை சீவி ஜடை பின்னி விடனும்.

வசந்த்: இது போனஸ்.. கண்டிப்பா…

ஷைலஜா: உனக்கு ஜடை பின்ன தெரியுமா?

வசந்த்: இது வரைக்கும் இல்ல.. இன்னைக்கு பின்னப் போறேன்.

ஷைலஜா: சரி.. அதையும் முயற்சி பண்ணு…

வசந்த்: ஆரம்பிக்கலாமா?

ஷைலஜா: நான் ரெடி.. என்ன பண்ணனும்னு சொல்லு.. என்னோட முடியை எடுத்துக்கோ..

வசந்த்: முதல்ல இப்படி உட்காருங்க…

ஷைலஜா அங்கிருந்த ஒரு ஸ்டூல்-ல் அமர்ந்தாள். வசந்த் அவள் முடியை ரசித்துக் கொண்டே அவள் பின்னால் வந்தான். அவள் அமர்ந்ததும் அவளுடைய தலையில் கை வைத்து அவளுடைய முடியை தொட்டான். முதல் முறையாக அவளுடைய முடியை உச்சந்தலையில் தொடுவது புது வித அனுபவமாக இருந்தது. அவள் ஜடையை பிடித்தான். மெல்ல அவள் ஜடையை கைகளில் ஏந்தினான்.



மிகவும் கனமான ஜடையாக தோன்றியது.  அவள் தலைமுடியை தொடுவதற்கு சம்மதம் கேட்பதற்கு பதிலாக அவளுக்கு மொட்டை அடிக்க சம்மதம் கேட்டிருந்தால் எப்படி இருக்கும் என மனதிற்குள் நினைத்தான். ஒருவேளை ஷைலஜா அதற்கும் சரியென்று சொல்ல வாய்ப்பிருக்கிறது. அப்படி சொல்லியிருந்தால் அவனருகில் எண்ணை பாட்டிலும், சீப்பும் இருந்திருக்காது. ஒரு குவளை தண்ணீரும், ஒரு சவரக்கத்தியும் இருந்திருக்கும். வசந்த்தின் கற்பனை வளர்ந்து கொண்டே சென்றது.

இப்போது இருக்கும் இந்த முடியை மொட்டை அடிக்க நினைக்கும் போதே மனது கட்டுக் கடங்காமல் சென்றது. அந்த போட்டோவில் இருப்பது போல இன்னும் நீளமான முடியை அவள்  கடந்த காலத்தில் மொட்டை அடித்த போது எப்படி இருக்கும் என நினைத்தான். அப்போது அவளுக்கு யார் மொட்டை அடித்து விட்டிருப்பார்கள்…. அந்த முடியை என்ன செய்திருப்பாள் என யோசித்துப் பார்த்தான். அவளிடம் அவள் இதற்கு முன் மொட்டை அடித்த சம்பவத்தை கேட்க வேண்டும் என்று வசந்த்  நினைத்தான். வசந்த்திடம் தலை முடியை கொடுத்து விட்டு அமர்ந்த ஷைலஜா மனதிலும் அதே எண்ணங்கள் தோன்றியது. கடந்த முறை இதே போல ஒருவன் கையில் அவளுடைய முடியை கொடுத்துவிட்டு மொட்டை அடிக்க அமர்ந்த நினைவுகள் வந்தது. அவள் அதை நினைத்துக் கொண்டிருந்த போது வசந்த் அவளுடைய ஜடையை அவிழ்த்து விட்டு அவள் முடியை விரித்து விட்டான்.


வசந்த் ஷைலஜாவின் மிருதுவான தலை முடியை அவளுடைய ஜடையில் இருந்து பிரித்து விட்டான். அவளுடைய ஜடையிலிருந்து அடர்த்தியான முடி வெளியே வர ஆரம்பித்தது. அவள் ஜடையை முழுவதுமாக பிறிது முடித்த பின் தன்னுடைய விரல்களை உள்ளே விட்டு மசாஜ் செய்வது போல கோதி விட்டான். ஷைலஜா தன்னுடைய கண்களை மூடி வசந்த் தன்னுடைய முடியை மசாஜ் செய்வதை அனுபவித்தாள். வசந்த் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் அவளுடைய முடியை அங்குலம் அங்குலமாக தடவிப் பார்த்தான். பின்னர் அங்கிருந்த எண்ணை பாட்டிலை எடுத்து கைகளில் கொஞ்சம் ஊற்றினான். பின்னர் மீண்டும் விரல்களை ஷைலஜாவின் தலை முடிக்குள் விட்டு அவளுடைய கூந்தலுக்கு என்னை தேய்த்து விட ஆரம்பித்தான். அவளுடைய தலைமுடியின் வேர் கால்களில் இருந்து படுமாறு எண்ணை தேய்த்தான். வசந்த் அவளுடைய தலைமுடிக்கு  எண்ணை தேய்த்து விட்ட விதம் ஷைலஜாவிற்கு ரொம்ப பிடித்திருந்தது. மிகவும் மென்மையாக, வலிக்காமல் அனுபவித்து அவள் முடியை ரசித்துக் கொண்டிருந்தான். 

ஷைலஜாவின் தலைமுடியை இடையில் நுகர்ந்து பார்த்ததை அவள் கவனித்தாள். வசந்த் எண்ணை தேய்த்து முடித்ததும் ஒரு சீப்பை எடுத்து அவள் தலை முடியை வாரி விட ஆரம்பித்தான். அவளுடைய அடர்த்தியான முடியை கையில் பிடித்து சீவிக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது. மெல்ல அவள் முடியை மூன்றாக பிரித்து ஜடை பின்ன முயற்சி செய்தான். ஏனோ அவள் முடியை தொட்டுக் கொண்டே இருக்கும் போது வந்த ஆர்வம் ஜடை பின்னும் போது வரவில்லை. வசந்த் தன்னுடைய தலைமுடியை ஜடையாக பின்ன சிரமப்படுவதை ஷைலஜா கவனித்தாள். திரும்பிப் பார்த்து சிரித்தாள். பின்னர் அவனிடம் இருந்து தன்னுடைய தலை முடியை அள்ளி கொண்டையாக போட்டுக் கொண்டாள். வசந்த் அவளுடைய கொண்டையை தடவிப் பார்த்து ரசித்தான். வசந்த் மேலும் சிறிது நேரம் அவள் தலை முடியை தடவிப் பார்த்து ரசித்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.



மறுநாள் அலுவலகத்திற்கு வழக்கம் போல சென்றான். தன்னுடைய நீளமான ஜடையை எடுத்து முன்னால் போட்டுக் கொண்டே அவனுடைய அறைக்கு முன்னால் அடிக்கடி சென்று வந்தாள் நந்தினி. தன்னை வெறுப்பேற்ற அப்படி செய்கிறாளோ என அவளை அழைத்து கேட்டு விடலாமா என நினைத்தான். அப்போது அவள் தலைமுடி போட்டுக் கொண்டிருந்த தூண்டிலில் இருந்து தப்பித்துக் கொள்ள வசதியாக ஆடிட்டர் உள்ளே வந்தார். இந்த வருடதிற்கான கணக்கு வழக்குகளை சரி பார்த்து முடித்து விட்டதாகவும், இன்னும் இரண்டு வாரத்திற்குள் இதை வருமான வரித்துறையில் சமர்ப்பிக்க வேண்டும் சென்றும் கூறினார். வசந்த் கணக்குகளை சரி பார்த்துவிட்டு இன்னும் ஒரு வாரத்தில் கையொப்பமிட்டு அனுப்பி வைப்பதாக கூறினான். ஆடிட்டர் செல்லும்போது அந்த மேனஜர் பதவி காலியாக இருப்பதையும் சீக்கிரம் அதை நிரப்பினாள் அவனுடைய சுமை கொஞ்சம் குறையும் என்று வலியுறுத்தினார். அவன் அதையும் ஒரு வாரத்திற்குள் சொல்வதாக கூறினான்.

அதன்பின் வசந்த் தன்னுடைய பணியில் மூழ்கிப்போனான். அவர் வெளியே சென்ற கொஞ்சநேரம் கழித்து யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். புன்னகையுடன் நந்தினி நின்று கொண்டிருந்தாள். அவளை உள்ளே வருமாறு அழைத்தான் வசந்த். நந்தினி தன்னுடைய ஜடையை எடுத்து சீட்டின் பின்பக்கம் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். வசந்த் அவளுடைய நீளமான ஜடையை கவனிப்பதை  அவளும் கவனித்தாள். 

பின்னர் வந்த விஷயத்தை அவனிடம் கூறினாள். குடும்ப சூழ்நிலை காரணமாக தினமும் ஓவர்டைம் பார்ப்பதாக கூறினாள். தன்னுடைய கணவன் இப்போது வேளையில்லாமல் இருப்பதால் கொஞ்சம் சிரமமாக இருப்பதாகவும், இந்த கம்பணியில் வேறு ஏதாவது வேலை இருந்தால்  தரும் படியும் கேட்டாள். ஒரு வேளை மேனஜர் பதவி காலியாக இருப்பதை நினைத்து இந்த வேலையை கேட்கிறாளோ என யோசித்தான். அப்படி கேட்கும் பட்சத்தில், அந்த வேலையை அவனுக்கு ஒதுக்கி கொடுத்தால் இவளுடைய தலைமுடியை கொடுப்பாளா என யோசித்தான். அவன் மனத்தில் நினைத்ததை  புரிந்து கொண்டவள் போல அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டாள் நந்தினி. வசந்த்தின் கண்கள் அவளுடைய அடர்த்தியான ஜடையின் மீதே இருந்தது. அதை அவளும் கவனித்தாள், ஆனால் அதை ரசித்துக் கொண்டே தன்னுடைய ஜடையை தடவிக் கொண்டிருந்தாள். வசந்த் நிமிந்து அவளை பார்த்த போது அவளும் அவனை பார்த்தாள்.

நந்தினி: ஸார்… உங்களுக்கு நீளமான முடி ரொம்ப பிடிக்குமா?

வசந்த்: ஏன் அப்படி கேட்குறீங்க?

நந்தினி: இல்ல… என்னோட முடியை இவ்ளோ ரசிக்கிறீங்களே..அதான் கேட்டேன்.

வசந்த்: அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல… சும்மா பார்த்தேன்.

நந்தினி: ஸார்.. நாம் கொஞ்சம் ரிலாக்சா பேசலாமா…

வசந்த்: சொல்லுங்க…

நந்தினி: நீங்க தினமும் என்னை ரசிச்சு பார்க்கிறதை  நான் கவனிச்சு இருக்கேன். போகப் போகத் தான் புரிஞ்சது நீங்க ரசிக்கிறது என்னோட தலை முடியைத் தான்னு….

வசந்த்: நந்தினி… நீங்க சொல்றது உண்மை தான்…. நான் அப்பப்போ உங்களோட முடியை ரசிப்பேன்..

நந்தினி: என்னை “நீ”ன்னே சொல்லுங்க… நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன்

வசந்த்: சரி

நந்தினி: பொண்ணுங்க எல்லாருக்கும் அவங்களோட அழகை ரசிக்கிறது பிடிக்கும்… தன்னோட தலை முடியை மத்தவங்க  ரசிக்கிறது பிடிக்கும்… இதை நீங்க தைரியமா என்கிட்ட சொல்லலாம்.

வசந்த்: இதை நான் முன்னாடியே உன்கிட்ட சொல்லியிருக்கலாம்.

நந்தினி: உங்களுக்கு என்னோட முடியை தொடனும்னு  ஆசை இருக்கா?

வசந்த்: மனசுக்குள்ள இருக்கு… ஆனா நிஜத்துல அது நடக்காது…

நந்தினி: ஏன் ஸார் அப்ப்டி சொல்லுறீங்க?

வசந்த்: உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சே…

நந்தினி: அதுனால என்ன ஸார்… உங்களுக்காக ஒரு  ஃபேவர் பண்ண மாட்டேனா?

வசந்த்: அதுல ஒரு சின்ன சிக்கல் இருக்கு…

நந்தினி: என்ன ஸார்…

வசந்த்: நீங்க பதிலுக்கு என்கிட்ட வேற ஏதாவது ஃபேவர்  கேட்பீங்களே…

நந்தினி: ஒரு வியாபாரத்துல ரெண்டு பக்கமும் லாபம் இருக்கணுமே ஸார்.

வசந்த்: நீ என்ன எதிர்பார்க்கிற?

நந்தினி: என்னோட வீட்டுக்காரருக்கு இங்க ஒரு வேலை வேணும்.

வசந்த்: எது.. இப்போ ஓப்பென்ல இருக்கிற அந்த மேனேஜர் வேலையா?

நந்தினி: ஹாஹாஹா… ஸார்… அந்த ஆளுக்கு அவ்ளோ பெரிய வேலையை நான் கேட்பேனா?

வசந்த்: என்ன நந்தினி உங்க ஹாஸ்பண்ட்டை இப்படி சொல்லுறீங்க..

நந்தினி: பின்ன என்ன ஸார். வெறும் +2 படிச்ச அந்த ஆளுக்கு போய் மேனேஜர் வேலையா

வசந்த்: பின்ன என்ன வேலை வேணும்?


நந்தினி: இங்க ஏதாவது பீயூண் வேலை, இல்லைனா நம்ம இன்வென்டரில ஏதாவது வேலை இருந்தா கொடுங்க… ஓரளவு நல்ல சம்பளம் இருக்கிற வேலை கொடுங்க…

வசந்த்: சரி… பதிலுக்கு நீங்க என்ன ஃபேவர் கொடுக்க போறீங்க?

நந்தினி: உங்களோட கண்ணு என்னோட தலை முடி மேல இருக்குன்னு எனக்கு தெரியும்…

வசந்த்: அதுனால…

நந்தினி: நீங்க எப்போ வேணும்னாலும் என்னோட முடியை எடுத்துக்கோங்க…

வசந்த்: ஏதுக்கோங்கன்னா… கட் பண்ணி எடுத்துக்கலாம்னு சொல்லுறியா?

நந்தினி: அய்யோ ஸார்… நீங்க என்ன என்னோட  முடியை அப்பிடியே கட் பண்ணலாம்னு பார்த்தீங்கலா? எப்படி ஸார் இவ்ளோ  நீளமான முடியை கட் பண்ணி எடுத்துக்கோங்கன்னு சொல்ல எனக்கு மனசு வரும்

வசந்த்: வேற?

நந்தினி: உங்களுக்கு என்னோட தலைமுடியில எப்போலாம் விளையாடனும்னு தோணுதோ சொலுங்க… நான் வறேன்… எவ்ளோ நேரம் வேணும்னாலும் விளையாடுங்க.


வசந்த்: உங்க  வீட்டுக்காரர் கேட்க மாட்டாரா?

நந்தினி: இப்போவே நான் தினமும் வீட்டுக்கு போக 9மணிக்கு மேல ஆகுது… எதுவும் அவரால சொல்ல முடியல…


வசந்த்: இதை நீங்க பார்த்தசாரதிகிட்ட கேட்டு இருக்கலாமே… அவர்கூடயும் நீங்க கொஞ்சம் நல்லா பழகுற மாதிரி இருக்கு.



நந்தினி: அந்த ஆளு ஒரு சபலக்கேஸ்  ஸார். அது மட்டும் இல்ல…. வேலைல சேர்க்கிற அதிகாரம் அவருக்கு இல்ல…

வசந்த்: அவருக்கும் நீங்க உங்களோட தலை முடியை வச்சு  தூண்டில் போடுற மாதிரி இருக்கு.

நந்தினி: அதெல்லாம் இல்ல ஸார்… அந்த ஆளு எப்போ என்னைய பார்த்தாலும் என்னோட தலை முடில ஆரம்பிச்சு என்னோட அழகை வர்ணிக்கிறேன்  பேர் வழின்னு, ரொம்ப கடலை போடுவார். பின்னாடி இருந்து என்னோட உடம்பை ரசிப்பார்னு பயந்து அவன் வந்ததும் திரும்பி நின்னு பேசுவேன். என்னோட கழுத்தை கவனிக்கிற மாதிரி இருக்கும்.. அதுனால என்னோட ஜடையை எடுத்து முன்னாடி போட்டுக்குவேன்.



No comments:

Post a Comment